சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதி மாணவர்கள் குழுவிற்கும், பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று (15) இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.