நுவரெலியா – கிரக்கரி வாவியிலிருந்து இன்று மாலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாவியில் சவாரியில் ஈடுபடும் படகோட்டிகளால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் 20 -30 வயதுக்கு இடைப்பட்ட ஆணொருவரினுடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் தெரியவராத நிலையில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.