மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிரான பயணத்தடையை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அவருக்கு எதிராக தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவலவினால் குறித்த பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
கப்ரால் சார்பில் அவரது சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான உத்தரவு ஏப்ரல் 6ஆம் திகதி வெளியிடப்படும் எனவும், இந்த தனிப்பட்ட முறைப்பாட்டை நீடிக்க முடியாது எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.