Saturday, June 7, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் பலி

பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் பலி

வவுனியா, செட்டிகுளம் நேரியகுளம் பகுதியில் வீடொன்றிற்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (14) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவன் நேரியகுளம் துடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறுவன் காணாமல் போனதை அறிந்ததும், சிறுவனின் தந்தை, பிரதேசவாசிகள் சேர்ந்து தேடியபோது சிறுவன் கிணற்றுக்குள் கிடப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து அவரை மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles