Friday, May 30, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிங்கள மொழியில் அழைப்பாணை - ஏற்க மறுத்தார் ஸ்ரீதரன்

சிங்கள மொழியில் அழைப்பாணை – ஏற்க மறுத்தார் ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு அனுப்பப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் இருப்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.

அப்போது, ​​உரிய அழைப்பாணை சிங்கள மொழியில் இருந்ததால் தனக்கு சிங்களம் படிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அதனை மொழிபெயர்த்து எம்.பியிடம் பொலிஸ் அதிகாரிகள் கொடுத்தபோது, பொலிஸ் சம்மனை ஏற்க முடியாது எனவும், நீதிமன்ற உத்தரவை தமிழில் பதிவுத் தபாலில் அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles