இலங்கை உள்ளிட்ட கடனுதவி கோரும் நாடுகளின் பங்களிப்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) சர்வதேச நாணய நிதியத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளைச் சேர்ந்த குழுவொன்று காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் இலங்கை, சாம்பியா மற்றும் கானா ஆகிய நாடுகளின் அதிகாரிகளும் உள்ளனர், மேலும் இந்த கூட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் இந்தியா ஆகியவை இணைந்து தலைமை தாங்குகின்றன.