ஸ்ரீ தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சமூக வலைத்தள செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.