Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்

கடவுச்சீட்டு விநியோகத்தில் தாமதம்

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரத்தையும் திகதியையும் முன்பதிவு செய்துள்ளவர்கள் குறித்த திகதிக்கு மறுநாளில் வந்து வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குடிவரவு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று(13) கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருக்கவில்லை.

எனவே நேற்றைய தினம் வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள காலம் ஒதுக்கிக்கொண்டவர்கள் இன்று(14) நண்பகல் 12 மணிக்கு பின்னர் பத்தரமுல்லையில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று வர முடியாத அனைவருக்கும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் அவர்களின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles