தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பத்தேகம – வெலிவிட்டிய – திவித்துர பிரதேச செயலகப் பிரிவின் மீமெடும பிரதேசமானது கல் அகழ்வுத் தொழிலுக்குப் பிரசித்தி பெற்ற பகுதியாகும்.
தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட உற்பத்தி மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையினால், தமது உற்பத்திப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள கைத்தொழிலாளர்கள்தெரிவித்துள்ளனர்.
இன்று ஆட்டுக்கல் ஒன்றின் விலை 10,000 ரூபாவாகவும், அம்மிக்கல்லின் விலை 8,000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.