நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆற்றலில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.
இதற்கிடையில், வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றன.