Wednesday, July 9, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF நிதி கிடைத்தவுடன் பொருட்களின் விலை குறையுமாம்

IMF நிதி கிடைத்தவுடன் பொருட்களின் விலை குறையுமாம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடனுதவி இலங்கைக்கு விரைவில் கிடைக்கும் எனவும், நிதி கிடைத்தவுடன் பொருட்களின் விலைகள் குறையும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டி மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முகமாக நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே,

நாவலப்பிட்டி நகர சபைக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி நாவலப்பிட்டி நகர சபையை அந்த வேட்பாளர்கள் கைப்பற்றுவார்கள்.

உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் அரசாங்கத்தை மாற்ற முடியாது, தற்போதைய அரசாங்கம் இன்னும் 2 1/2 வருடங்கள் ஆட்சியில் இருக்கும் , தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

பல வருடங்களாக மின்கட்டணம் அதிகரிக்கப்படாததால், மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்காகவே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு போதுமான எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்து வருவதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு குறையும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles