இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஒருகோடியே இருபத்தேழு இலட்சத்திற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களில் பதினொரு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து நானூற்று பதினெட்டு பேர் பெண்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது
இவர்களில் கனரக வாகனங்களை ஓட்டக்கூடிய பெண்கள் இரண்டாயிரத்து எண்பத்திரண்டு பேர் உள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்தார்.
டிசம்பர் 31, 2010 வரை, இலங்கையில் 23,488 பெண்கள் மட்டுமே சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுள்ளனர்.
ஆனால் 2020 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் சாரதிப் அனுமதி பாத்திரங்களை பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த தசாப்தத்தில் மாத்திரம் 943,749 பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெண்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெறும் போக்கு தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள தகவல் கோரிக்கையின் பிரகாரம் இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளது.