எப்பாவளை – மெடியாவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய அரச அதிகாரி உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கிராஃபைட் சுரங்க உரிமத்தைப் பயன்படுத்தி புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களுக்கு சொந்தமான புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.