8ஆவது மகளிர் இருபதுக்கு 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
கேப் டவுன் நகரில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை, பங்களாதேஷ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சோபனா மோஸ்தரி 29 ஓட்டங்களையும் நிகர் சுல்தானா 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், ஒஷேதி ரணசிங்க 3 விக்கெட்டுகளையும் சமரி அத்தபத்து 2 விக்கெட்டுகளையும் ரணவீர 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 127 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை மகளிர் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹர்ஷித்த மாதவி ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் நிலக்ஷி டி சில்வா ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மருஃபா அக்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 50 பந்துகளில் ஒரு சிக்ஸர் 8 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஹர்ஷித்த மாதவி தெரிவுசெய்யப்பட்டார்.