தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கான நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் பட்சத்தில் உயர்நீதிமன்றினை நாட வேண்டிய நிலை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்குரிய பாதீட்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 770 மில்லியன் ரூபாவே தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்லுக்கான செலவினங்களை 03 அல்லது 04 பில்லியன் ரூபாவில் ஈடு செய்ய முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.