ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான கடனில் சிக்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இன்று (10) நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
கடன் மற்றும் வட்டியை செலுத்தும் போது, நிறுவனம் எந்த லாபத்தையும் அடையாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
தீர்வாக இந்த நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டில் இந்நோய்க்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு கசப்பு மருந்தை பருக வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.