மக்களுக்கு பொய் சொல்வது குற்றமாகும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (10) நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மத்திய வங்கியால் என்ன செய்ய முடியுமோ அதை அரசாங்கம் செய்ய முடியும் என வதந்திகள் பரவுகின்றன.
அரசியல்வாதிகள் மத்திய வங்கிக்குள் புகுந்து பணத்தை அச்சடித்து வட்டி விகிதத்தை தீர்மானிக்க முடியுமா என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை மத்திய வங்கி வட்டி விகிதத்தை தீர்மானித்தமைக்கு எமது வீடுகளை தீயிட்டு கொளுத்தினால் சரியா என அவர் மேலும் தெரிவித்தார்.