நாட்டின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக நிலநடுக்கம் மற்றும் சுனாமி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வெல்லவாய, புத்தல மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சியின் ரிக்டர் அளவுகோல் இதுவரை கணக்கிடப்படவில்லை என்று பதில் இயக்குநர் அஜித் பிரேமா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.