உள்ளூராட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத்தை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட எம்.பிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்கள் இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மற்றும் ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் இந்த உறுதிமொழியில் திருப்தியடைவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்பின், அந்த உறுதிமொழியை ஏற்று, இரண்டு மனுக்களின் விசாரணையை முடித்து வைக்க, உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.