Friday, June 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21,000 ஐ கடந்தது

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 21,000 ஐ கடந்தது

தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நில அதிர்வுகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கியில் 17,674 பேரும் சிரியாவில் 3,377 பேரும் இறந்துள்ளனர்.

அதன்படி உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 21 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளின் கீழ் சிக்கி உயிருடன் இருந்த பலர் தண்ணீர் அல்லது கடும் குளிரில் வெப்பம் இன்றி உயிரிழப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், உயிர் பிழைத்த பலர் தங்குமிடம் தண்ணீர் எரிபொருள் அல்லது மின்சாரம் இல்லாமல் தங்கள் உயிரை இழக்க நேரிடும் என்று உலக சுகாதார நிறுவனம் அச்சம் வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles