Saturday, June 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மா விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

கோதுமை மா விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

மாஃபியாவை தடுத்து நிறுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு கோதுமை மாவின் விலையை மக்கள் தாங்கும் அளவிற்கு குறைக்க வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் சில்லறை விலை அதிகபட்சமாக 240 ரூபாவாக அதிகரித்துள்ளது என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 193 ரூபாவாக இருந்தது.

நாட்டின் ஏழை, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் கோதுமை மா பிரதான உணவாக மாறியுள்ளது .

எனவே, நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் வர்த்தக அமைச்சு இந்தப் பிரச்சினையில் தலையிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கான விடயத்தில் தலையிட்டமைக்காக வர்த்தக அமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

ஆனால், இந்த திடீர் விலைவாசி உயர்வால், யாருக்கு தரகுக்கட்டணம் கிடைக்கும் என்ற சந்தேகம் உள்ளது.

அப்பாவி மக்களுக்கு எரியும் பிரச்சினையாக இது உள்ளது.

பிரதான கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் இந்த மாஃபியாவை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles