அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்தது.
அரச அச்சக கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 2 இலட்சத்து 30 ஆயிரத்து 984 ரூபா 45 சதத்தினைஇ தனது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி கட்டணத்தைச் செலுத்துவதற்காக கூட்டுத்தாபன தலைவருக்கு அழுத்தம் கொடுத்தமைஇ அதன் பிரகாரம் குறித்த கட்டணம் செலுத்தப்பட்டமை தொடர்பில் இந்த வழக்குஇ அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இருவருக்கும் எதிராக தொடரப்பட்டது