Saturday, June 21, 2025
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுதுருக்கி நிலநடுக்கம்: கால்பந்து வீரரும் பலி

துருக்கி நிலநடுக்கம்: கால்பந்து வீரரும் பலி

துருக்கிய காற்பந்து அணியின் கோல் காப்பாளர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானும் (Ahmet Eyup Turkaslan), திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக அவரது கழகமான யெனி மலட்யாஸ்போர் உறுதிப்படுத்தியுள்ளது.

“எங்கள் கோல் காப்பாளர், அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான், நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி தனது உயிரை இழந்தார். அமைதியாக இருங்கள்” என்று கால்பந்து கழகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

28 வயதான டர்கஸ்லான், 2021 இல் இணைந்த பிறகு துருக்கிய இரண்டாம் பிரிவு கழகமான யெனி மலடயாஸ்போருக்கு ( Yeni Malatyaspor) ஆறு முறை விளையாடினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles