Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை விட்டு வெளியேறும் விமானக் கட்டுப்பாட்டாளர்கள்?

நாட்டை விட்டு வெளியேறும் விமானக் கட்டுப்பாட்டாளர்கள்?

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்வதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு 138 அதிகாரிகள் தேவைப்பட்ட போதிலும் தற்போது 81 அதிகாரிகள் மாத்திரமே சேவையில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 4 அல்லது 5 உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகிச் சென்றால், இந்த நாட்டில் விமானப் பயணம் பாரிய ஆபத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோரம் இல்லாவிட்டால், எதிர்காலத்தில் எமக்கு சொந்தமான வான்வெளியை சர்வதேச சிவில் விமான சேவைகள் சங்கம் வேறு ஒரு அண்டை நாட்டிற்கு கையளிக்கும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறு நடந்தால், இலங்கைக்கு பாரிய அந்நிய செலாவணி வருமானத்தை இழக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles