முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபது இலட்சம் தொகை தொடர்பில் கோட்டாபயவிடம் வாக்குமூலங்கள் நேற்று (06) பதிவு செய்யப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்று இந்த விசாரணைகளை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.