இரட்டைக் குடியுரிமை அரசியலுக்கு தடையாக இருந்தால், அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் நபர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.