Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர்வெறுப்பு நோய் இறப்புகள் அதிகரிக்கும் அபாயம்

நீர்வெறுப்பு நோய் இறப்புகள் அதிகரிக்கும் அபாயம்

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் நீர்வெறுப்பு நோய் வேகமாக பரவும் அபாயம் காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில், இலங்கையில் அடிமட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தால், நீர்வெறுப்பு நோயால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

எனினும் தற்போது அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

அதனால், வீதிகளில் உலாவும் நாய்களிடம் கவனமாக இருக்குமாறும், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிய தடுப்பூசிகளை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறும் எச்சரிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles