Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலக்கரி கொள்வனவு நெருக்கடியில்

நிலக்கரி கொள்வனவு நெருக்கடியில்

இலங்கையில் மின் உற்பத்திக்காக நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு லங்கா நிலக்கரி நிறுவனத்திற்கு (LCC) நிதி தேவையாகவுள்ளது.

ஆனால் இலங்கை மின்சார சபையிடம் (CEB) நிதிக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், பணப் பற்றாக்குறை காரணமாக நிராகரிக்கப்பட்டது.

நாளை (6) இலங்கை வரும் நிலக்கரி கப்பல் ஒன்றுக்கும், அடுத்த கப்பலுக்கான முற்பணத்துக்குமாக $12.32 மில்லியன் தேவைப்படுகிறது.

இலங்கை மின்சார சபைக்கு நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு நிதி இல்லை எனவும் நஷ்டத்தில் இயங்குவதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

இதனால் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles