Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

நேபாள வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு

75வது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌத்யால் நாட்டிற்கு வந்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேபாள வெளிவிவகார அமைச்சரை இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் வரவேற்றார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட விழாவில் அமைச்சர் பௌத்யால் விருந்தினராக கலந்து கொள்வார் என நேபாள வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌத்யால் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles