ரயில் இயக்குநர் உதவியாளர் பற்றாக்குறை காரணமாக 3 நாட்களுக்குள் 123 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி கடந்த மாதம் 28 ஆம் திகதி 27 பயணிகள் ரயில்களும், 9 எரிபொருள் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட 36 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 29ஆம் திகதி 29 பயணிகள் ரயில்கள், 15 எரிபொருள் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட 44 பயணங்களும், 30ஆம் திகதி 36 பயணிகள் ரயில்கள், 12 எரிபொருள் மற்றும் சரக்கு தொடரூந்து உட்பட 43 ரயில் பயணங்களும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.