Tuesday, July 29, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன விபத்தில் தாயும் மகனும் பலி

வாகன விபத்தில் தாயும் மகனும் பலி

குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் கொகரெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

தேவகிரி தித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான தாயும், 39 வயதான மகனும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இபோச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, அதனுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துள்ளது.

இதன்போது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொகரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles