காலி – அக்மீமன – அமல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்ட நிலையில் T-56 ரக 35 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிரதேசவாசிகள் தமது காணியில் கழிவுநீர் அகற்றும் குழியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த 35 தோட்டாக்களுடன், ஏனைய துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.