Sunday, June 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைத்தில் இருந்த இலங்கை பணியாளர்கள் 47 பேர் நாடு திரும்பினர்

குவைத்தில் இருந்த இலங்கை பணியாளர்கள் 47 பேர் நாடு திரும்பினர்

நாடு திரும்பமுடியாத நிலையில் குவைத்தில் இருந்த இலங்கை பணியாளர்கள் 47 பேர் கொண்ட குழு இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 230 என்ற விமானத்தில் மஸ்கட்டில் இருந்து இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

இவர்களில் 40 பேர் வீட்டு பணிப்பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இன்று நாடு திரும்பிய வீட்டு பணியாளர்களில் பெரும்பாலானோர் வீட்டு உரிமையாளர்களால் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் குவைத் தூதரகத்திற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles