வருடாந்தம் மார்ச் 7 ஆம் திகதியை குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய விசேட தினமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.