அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடன் மீளளிப்புகளுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் உதவித்திட்டம் கிடைத்ததும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும். கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாடு ஏற்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மீள் தடமேறும் என்றார்.