Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு : இலங்கையின் பொருளாதாரம் மீள தடமேறும்

கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடு : இலங்கையின் பொருளாதாரம் மீள தடமேறும்

அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடன் மீளளிப்புகளுக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் உதவித்திட்டம் கிடைத்ததும், கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும். இதற்கான பேச்சுவார்த்தைகளை ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய முடியும். கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாடு ஏற்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மீள் தடமேறும் என்றார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதி கற்றல் செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 23ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களும்...

Keep exploring...

Related Articles