கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு சலுகை வழங்கப்படும் என சீனாவின் எக்சிம் வங்கி கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி நீடிக்கப்படுவதற்கு தேவையான ஆதரவை இலங்கைக்கு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.