Sunday, April 12, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் பாவனையை குறைக்குமாறு கோரிக்கை

மின் பாவனையை குறைக்குமாறு கோரிக்கை

க.பொ.த உயர்தர பரீட்சை இடம்பெறும் காலத்தில் மின்சார பாவனையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மின்சார பாவனையாளர்களிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கு மின்வெட்டுகளைத் தவிர்ப்பதற்காக இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles