Friday, August 22, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டர்ன் அறிவிப்பு

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜசிந்தா ஆர்டர்ன் அறிவிப்பு

நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தாராளவாத தொழிலாளர் கட்சி ( டiடிநசயட டுயடிழரச Pயசவல)யை சேர்ந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

அண்மையில், அங்கு நடைபெற்ற தேர்தலில் ஜசிந்தா ஆர்டர்னின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதியுடன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

தனது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஜசிந்தா ஆர்டர்ன் கூறுகையில், ‘ இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. அப்படி இருந்து இருந்தால் வெறும் இரண்டே மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகி சென்று இருப்பேன். நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன்’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles