Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉறங்கி கொண்டிருந்த பேரனை தாக்கி கொலை செய்த தாத்தா

உறங்கி கொண்டிருந்த பேரனை தாக்கி கொலை செய்த தாத்தா

கொட்டவெஹெர – கலேகம பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தனது தாத்தாவால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி இளைஞன் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது தாத்தாவினால் தாக்கப்பட்டதோடு, சந்தேக நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் நவோத் தில்ஷான் என்ற 18 வயது இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொட்டவெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles