ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக திட்டமிடபட்டிருந்த 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா தமது ஆடவர் அணியை விலகியுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மார்ச்சில் இந்த தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சிறுமி மற்றும் பெண்கள் கல்வி மீதான தலிபான் அடக்குமுறையை கருத்திற்கொண்டு
தமது அரசாங்கத்துடன் கலந்தாலோசித்ததையடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.