Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுவைட்டில் அடிமை தொழிலாளர்களாக இருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைட்டில் அடிமை தொழிலாளர்களாக இருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

குவைட் நாட்டின் ஈரானின் எல்லையை அண்மித்த பகுதியில் நீண்டகாலமாக அடிமைத்தொழிலாளர்களாக நடத்தப்பட்டு வந்த ஆறு இலங்கையர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இன்று அதிகாலை ஜசீரா விமானம் வாயிலாக நாடு திரும்பியுள்ளனர்.

திருகோணமலை மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

கிண்ணியா பகுதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் வாயிலாக குறித்த நபர்கள் குவைட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles