Sunday, July 27, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானைகளுக்கு உணவளித்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

காட்டு யானைகளுக்கு உணவளித்தால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்

புத்தல – கதிர்காமம் வீதி மற்றும் உடவலவ, ஹபரணை போன்ற இடங்களிலும் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் நபர்களையும் அந்த விலங்குகளிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் நபர்களையும் கைது செய்து அவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வீதியில் காட்டு யானைகளின் வாகனங்கள் தாக்கப்படுவதை தடுக்கவும், நடமாடும் வாகனங்களை பயன்படுத்தி காட்டு யானைகளை விரட்டவும் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி கடந்த சில நாட்களாக யால-கல்கே வன தள அலுவலக அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் மூலம் இது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று காலை 05 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடாத்தப்பட்டதுடன், தேவைக்கு ஏற்ப இத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles