Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைனோபார்மை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம்

சைனோபார்மை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்த தீர்மானம்

பைசர் தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதால், சைனோபார்ம் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது.

இந்தாண்டு நாட்டில் கொரோனா தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இதுவரை கொவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பெறாதவர்கள் சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1.8 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் தங்களிடம் இருப்பதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமிதா கினிகே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆறு மில்லியன் பேர் இதுவரை பூஸ்டர் டோஸ் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles