அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் இன்று முதல் 2022 கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.
இம்மாதம் 20 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை காரணமாக ஜனவரி 21ஆம் திகதி மூடப்படும் பாடசாலைகள் மீண்டும் பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பமாகும்.
அதன் பின்னர் மார்ச் 24ம் திகதி மூன்றாம் தவணையின் இறுதி கட்ட விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.