திருகோணமலை – புலிக்கண்டிகுளம் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
வீட்டு வளாகத்திற்குள் யானை பிரவேசித்த நிலையில், அதனை விரட்டுவதற்கு முற்பட்ட போது, இன்று அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் புளிக்கண்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை மயிலவௌ பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவரை யானை தாக்கியதில், அவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
