Tuesday, July 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்

மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது தயாராகி வருவதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles