Friday, April 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇயங்காத காலி துறைமுகத்தில், வேலை செய்து சம்பளம் வாங்கும் ஊழியர்கள்

இயங்காத காலி துறைமுகத்தில், வேலை செய்து சம்பளம் வாங்கும் ஊழியர்கள்

காலி துறைமுகத்திற்கு பல வருடங்களாக கப்பல் வராத போதிலும், சுமார் நூறு துறைமுக ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளாக மில்லியன் கணக்கில் செலுத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளாக துறைமுக அதிகாரசபை மாதாந்தம் பல மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக காலி துறைமுகத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இரண்டு குழுக்களாகப் பணிபுரிந்து மேலதிக நேர கொடுப்பனவுகளைப் பெறுவதாகவும், துறைமுகத்தில் மாணவ ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்ய கைரேகைகள் பயன்படுத்தப்பட்டாலும், அவர்கள் வருகைப் புத்தகத்தில் கையெழுத்திடுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

இந்த ஊழியர்களில் சிலர் துறைமுகத்தில் சிறு கடமைகளைச் செய்து நேரத்தைச் செலவழித்து மேலதிக நேர அனுமதியுடன் வெளியேறுவதாகவும், மற்றொரு குழு ஊழியர்கள் வருகை ஆவணத்தில் கையொப்பமிட்டு வீட்டிற்குச் செல்வதாகவும் அதிகாரி குறிப்பிட்டார்.

ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதற்காக, அவர்களை வேறு துறைமுகங்களுக்கு மாற்ற முயற்சித்த போதும், காலி மாவட்ட ஆளும் கட்சி அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டினால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டதாக அந்த சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles