சீனாவினால் இலங்கைக்கு மற்றுமொரு அரிசி கையிருப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சீனாவினால் வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அல்லது 10 மில்லியன் கிலோகிராம் அரிசி இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
1000 மெட்ரிக் டன் அரிசி கையிருப்பு நேற்று நாட்டிற்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 7,900 பாடசாலைகளில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் படிப்பை ஆதரிப்பதற்காக இந்த நன்கொடை வழங்கப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.