புதிய ஆண்டில் நாடாளுமன்றம் கூடும் தினத்தில் மாற்றத்தை செய்ய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி முதல் முதலில் கூடவுள்ளது.
நாடாளுமன்றத்தின் புதிய ஆண்டுக்கான கூட்டத்தை ஜனவரி மாதம் 17 ஆம் திகதி நடத்துவது என இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 2022 ஆம் ஆண்டின் இறுதி நாடாளுமன்ற அமர்வு நாளைய தினம் நடைபெறவுள்ளது.