திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகினர்.
திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா 50,000 ரூபா மற்றும் 3,500,000 ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான 14 பிணைப் பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன்இ ஒரு வழக்கில் பிணை வழங்க மறுத்தார்.
அதன்படிஇ பிரியமாலியை வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.
ஜானகி சிறிவர்தனவுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுகளுக்காக தலா ஐம்பதாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
#Lankadeepa